KING FM TAMIL

KING FM TAMIL NEWS

பிரதமரின் விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


இந்த எதிர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் மேற்கொண்டனர். 


இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,


மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.



 

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் காவல்துறையினரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.



No comments:

Powered by Blogger.